Saturday, 30 March 2013

(நாளூம்  இன்னிசையால்  தமிழ்  பரப்பும் ஞானசம்பந்தனுக்கு  உலகவர்முன்  தாளம்  ஈந்து  அவன் பாடலுக்கு  இரங்கும்  தன்மையாளன்)  இவ்வாறு  சுந்தரர்  ஈசனை  வர்ணிக்கிறார் .
ஈசன்  சம்பந்தரை ( பாலை)  கொடுத்து  ஆட்கொள்கிறார்.நாவுக்கரசரை ( சூலை)  கொடுத்து ம் , சுந்தரரை  (ஓலை ) கொடுத்தும்  ஆட்கொள்கிறார் .நாவுக்கரசர்  பல்லவ  மன்னனுடன்  சேர்ந்து   ஈசனை  மறந்து  பகுத்தறிவு   பாதையில்   செல்கிறார் . ஈசன்  அவன்  சகோதரியின்   வேண்டுகோளுக்கு   இறங்கி  நாவுக்கரசருக்கு   சூலை  நோயை  கொடுக்கிறார் . அவரும்   தவறை   உணார்ந்து    வீரட்டானத்துறை  ஈசனை  சரண்  அடைந்து '  கூற்றாயினவாரு ' என்னும்  பதிகம்  பாடி  நலம்  பெருகிறார் . அதன்   பிறகு  அவர் ஈசர்க்கு  தொண்டராக பெரும்   பணி  ஆற்றினார் . சுந்தரர்  திருமணத்தன்று  ஈசன்  ஓர்  ஓலையை   காட்டி  பல  தலைமுறைகளாக  சுந்தரர்  குடும்பம்  தன்  குடும்பத்திற்கு  அடிமை  என்று  அவரை திருவெண்ணெய்  நல்லூர்   அழைத்து  சென்று   " பித்தா "  என்று   அடி எடுத்து   கொடுத்து  பாட    செய்கிறார் . இவ்வாறு  இந்த  தமிழ்  இசைக்காக  அவர்   ஆற்றிய  விளையாடல்கள்  அநேகம்     

No comments:

Post a Comment