Monday, 25 March 2013

பக்தி  பெருக்கால்  இந்த  மகான்கள்  பாடிய  தமிழிசைக்கு  மயங்கிய  பரம்பொருள்  ஆற்றிய  திருவிளையாடல்கள்  அதிசயமானவை . பெரியாழ்வார்  கண்ணனை  மானசீகமாய்  கண்டு , தாலாட்டு  முதல்  ஒவ்வொரு  பருவ   சேட்டைகளையும்  மெய்யுருக வர்ணித்து   பாடுகிறார் . பூமிதேவியே  வளர்ப்பு  மகளாக  பெற்று  அரங் கனையே   மருமகனாக  பெருகிறார் . ஆண்டாள்  சிறு  பிராயம் முதல்  கண்ணனையே  நினைந்து  உருகி   பாடி ,  பின்பு  பாவை   நோன்பு  இருந்து  அவரையே  கணவனாக  அடையும்  பேறு  பெறுகிறாள் . திர்ப்பாணாழ்வார்   தாழ்ந்த  குலத்தை   சேர்ந்தவர்  என்பதால்  அரங்கன்  கோவில்   அந்தணர்கள்  அவரை  கடுமையாக  நடத்த , அரங்கன்  அந்தணர்கள்  கனவில் தோன்றி   ஆழ்வாரை   தோளில்  சுமந்துகொண்டு  சன்னதிக்கு   அழைத்து  வருமாறு  கட்டளை  பிறப்பிக்கிறார் . பேயாழ்வார் ,பூதத்தாழ்வார்  பொய்கை ஆழ்வார்  மூவரும் , ஒரு  மழைநாளில்  ஒரு  திண்ணையில்  ஒண்டி  நிற்க  அவர்கள்  இடையில்  நாரணன்  புகுந்து கொண்டு  பிறகு  அவர்களுக்கு  காட்சிதருகிறான் . இன்னும்  எத்தனையோ  திருவிளையாடல்கள் .இசைக்கு  இத்தனை  மகத்துவம் .        

No comments:

Post a Comment