Wednesday, 19 August 2015

manivasakar

முக்திநெறி  அறியாத  மூர்க்கரொடு  முயல்வேனை
பக்தி நெறி  அறிவித்து  பழவினைகள்  பாறும்  வண்ண
சித்தமலம்  அறுவித்து  சிவமாக்கி  எனை  ஆண்ட
அத்தன்  எனக்கருளியவாறு  ஆர்  பெறுவார்  அச்சோவே |

மாணிக்கவாசகர்   சிவமாகிய  அக்காட்சி  எல்லோரையும்  மெய்சிலிர்க்க  வைக்கிறது . அச்சோவே  பதிகங்கள்  அவர்  கடைசியாக  பாடியது . மாணிக்கவகரின்  பாடல்கள்  ஈசன்  கைப்பட  எழுதப்பட்ட  காரணத்தால்  நமக்கு  முழுமையாக  கிடைத்தது . மற்ற  தேவார  பாடல்கள்  நமக்கு  முழுமையாக . கிடைக்கவில்லை . அப்பர், சம்பந்தர்  சுந்தரர்  இவர்கள்  பாடிய  பதிகங்கள்   முழுமையாக  பெறு ம்
பாக்கியம்  நமக்கு  கிட்டவில்லை . இயற்கையின்  சீற்றத்துக்கு  அவை  தப்பவில்லை . ஈசனே  தன்  கைப்பட  எழுதி  கையொப்பமிட்டு  வைத்த  அதிசயத்தை  விட  மணிவாசகருடைய  பெருமையை  விளக்க  வேறு  சான்று  தேவையில்லை . ஆனாலும்  தில்லையில்  நடந்த  ஒரு  நிகழ்ச்சி  குறிப்பிட  தக்கது
 

No comments:

Post a Comment