Monday, 24 August 2015

இலங்கையை  சேர்ந்த  புத்த  பிக்ஷுக்கள்  சிலர்  சிதம்பரத்தில்  இருந்தனர் . அவர்கள்  சிவபெருமானின்  பெருமையை  உணராதவர்கள் . அவரை  பலவாறு  இகழ்ந்து  பேசிவந்தனர் . ஐயனின்  ஆணைப்படி  அவர்களுக்கு  அறிவு  புகட்ட  மாணிக்கவாசகர்  ஓர்  ஊமை  பெண்ணை  பேச  வைக்கிறார்  அவளுடன்  சேர்ந்து   பிக்ஷுக்களுடன்  வாதிட்டு  அவர்களை  வென்று  அவர்களை  பேச  முடியாத  ஊமை  ஆக்குகிறார் . அவர்களும்  தங்கள்  தவறை  உணர்ந்து  மாணிக்கவாசகர்  அருளால்  மீண்டும்  பேசும்  திறனை  அடைந்து  அம்பலகூத்தனை  சரணடைகின்றனர் .
   திருவாசகம்  பாடல்கள் எவ்வாறு  நெஞ்சை  உருக்கும்  என்பதை  உணர்த்தும்  சம்பவம்  காணலாம் . கி.உ. போப்  எனும்  ஆங்கிலேயர்  தமிழ்  ஆராய்ச்சி  செய்ய  தமிழகம்  வந்தவர் . அவர்  திருவாசகத்தை  படித்து  அதில்  நெஞ்சை  பறிகொடுத்தவர் .அதை  ஆங்கிலத்தில்  மொழி  பெயர்க்கிறார்   ஒரு  கடிதத்தில்  திருவாசகத்தை  எழுதுகையில்  உணர்ச்சி வசப்பட  அவர்  கண்கள்  கண்ணீர்  சிந்துகின்றன . அவரும்  அதை  மறைக்க  நினைக்காமல்  அப்படியே  அதை  அனுப்பி  விடுகிறார் . 

No comments:

Post a Comment