Tuesday, 13 November 2012

ராஜராஜசோழன்  அரசாண்ட   காலத்தி.ல் சில  சிவ பக்தர்க்ளிடமிருந்து   நாயன்மார்களால்  பாடப்பெற்ற   பாடல்கள்  கொண்ட   ஓலைசுவடிகள்   சிதம்பரம்  ஆலயத்தில்  ஓர்  
அறையில்   பூட்டப்பட்டு   தீ க்ஷிதர்கள்  வசம்   திறவு கோல்   உள்ளதா   கேள்விபட்டான் .  ராஜராஜன்   பெறும்   முயற்ச்சி   செயது   அவைகளை  மீ ட்டான்.   அவற்றை   நம்பிஆண்டார்நம்பி
என்ற   பெரும்   சிவ பக்தரிடம்   ஒப்படைத்தான் .  அவரும்   சிவ
பெருமானின்  பேரருளால்  பேரழிவு   நிலையில்   இருந்த   சுவடிகளை   மீட்டெடுத்து    12  திருமுறைகளாக   மிகுந்த   சிரமத்திற்கு   பிறகு   தொகுத்து   அளித்தார்.  முதல்  7 திருமுறைகள்  ஞானசம்பந்தர் ,  திருநாவுக்கரசர் ,  சுந்தரர்   இவ்  மூவரும்   பாடியவை .  8  திருமுறை     மாணிக்கவாசகர்   பாடிய
திருவாசகம்  மற்றும்   சில , 9 திருமுறை   திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு   போன்று   சில  நாயன்மார்களால்  பாடப்பட்டவை .  10  திருமூலரின்   திருமந்திரம் . 11 திருமுறை   11  பக்தர்களால்   பாடப்பட்டவை .  12 திருமுறை 
பிற்காலத்தில்   63  நாயன்மார்களின்   வரலாற்றை   சேக்கிழார் 
பெருமானால்   தொகுத்து   பாடப்பட்ட   பெரியபுராணம்   ஆகும்                

No comments:

Post a Comment