Saturday, 3 August 2019

ஐயடிகள்   காடவர்கோன்   அடியார்க்கும்   அடியேன் | 

தொண்டை   நாட்டிலே   காஞ்சிபுரத்தை   தலைநகராக   கொண்டு    ஆட்சி   செய்த   பல்லவ குலத்து   அரச   பரம்பரையில்   பிறந்தவர்   ஐயடிகள்   காடவர்கோன்   என்பவர் .  அவருக்கு   மக்கள்   எல்லோரும்   எம்பெருமான்   சேவையில்   ஈடுபட்டு   பேரின்ப   வாழ்வு   வாழ   வேண்டும்   என்ற   பேரவா.  இவ்வாறு   சைவம்   தழைக்க   ஆட்சி   புரிந்து   வரும்   நாளில்   அவருக்கு    ஐயன்   கோயில்   கொண்டுருக்கும்   ஆலயங்களை   தரிசித்து   மகிழ்ந்து   வாழ்நாளை   கழிக்க   பேராவல்   உண்டாயிற்று .  ஆட்சி   பொறுப்பை   தன்   மகனிடம்   ஒப்படைத்து   விட்டு   தலயாத்திரை   கிளம்பினார் .  முதலில்   தில்லை   சென்றார் .  அங்கு   அம்பலக்கூத்தனை   தரிசித்து   அவர்   திருக்கூத்தை   கண்டு   களித்து   செந்தமிழ்   வெண்பாக்கள்   பாடி   மகிழ்ந்தார் .  அதன்பின்   பல   தலங்களை   தரிசித்து   ஒவ்வொரு   தலத்திலும்   ஒவ்வொரு   வெண்பா   பாடி   மகிழ்ந்தார் .  இவ்வாறாக   ஐயன்  திருப்பணி   செய்து   கொண்டு   பல   காலம்   வாழ்ந்து   ஈசன்   அடி   சேர்ந்தார் .      

No comments:

Post a Comment