Friday, 9 August 2019

 நிறைகொண்ட   சிந்தையால்   நெல்வேலி   வென்ற
நின்ற சீர்   நெடுமாறன்   அடியார்க்கு   அடியேன் |

பாண்டியர்கள்   வம்சத்தை   சேர்ந்த  நெடுமாறன்   என்பவர்   மதுரையை   ஆட்சி   செய்து   வந்தார் .   பூர்வ   ஜென்மத்தின்   புண்ணியத்தின்   பயனாக   சிறந்த   சிவ   பக்தையான   மங்கையற்கரசியாரை   துணைவியாக   அடைந்தார் .   நெடுமாறன்   சமணர்கள்   போதனையால்   மயங்கி   சைவம்   துறந்து   சமணத்தில்   சேர்ந்தான் .  அரசியவர்கள்    அதனால்   பெரும்   துக்கம்   அடைந்தார் .  அப்போது   ஞானசம்பந்தர்    சைவத்திற்கு   பெரும்   தொண்டாற்றி   கொண்டிருந்தார் .  அதை   அறிந்த   அம்மையார்   அவர்   காலில்   விழுந்து   சரணடைந்தார் .   அவர்    பாண்டிய   நாடு   வந்து   சமணர்களை   வாதில்    வென்று   திருநீறு பூ சி   அரசனையும்   மாற்றினார்   நீறு   பூசியதால்   கூன்   விழுந்த   அவர்   முதுகும்   நிமிர்ந்து   அவர்   நின்றசீர்   நெடுமாறன்   என்று   ஆனார் .  அது   முதல்  அவருக்கு    சிவபெருமானிடம்   குன்றாத   பக்தி   ஏற்பட்டது .     சிவாலயங்களை   அமைத்து    பல   ஆலய  திருப்பணிகள்   செய்யலானார் .   வடபுலத்து   மன்னர்களை     நெல்வேலியில்   வென்று   தொடர்ந்து   ஈசனுக்கு   பல   கைங்கர்யங்கள்   செய்து   கொண்டு   வாழ்ந்து   முடிவில்  ஈசனடி   சேர்ந்தார் .
  .            

No comments:

Post a Comment