Tuesday, 13 August 2019

அறைகொண்ட   வேல்நம்பி   முனையடுவார்க்கு   அடியேன் |

பொன்னி   நாட்டிலே   திருநீடூர்   என்றொரு   தலம்   உள்ளது .  அவ்விடத்தில்   வேளாளர்   மரபில்   பிறந்த   ஒரு   சிறந்து   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .   சிவனடியார்களிடத்து   பெரும்   பக்தியும்   மரியாதையும்   உடையவர் .  யுத்தத்தில்   தோற்றவர்கள்    இவரிடம்  திரவியம்   கொடுப்பதாக   கூறினால்   இவர்   படை   திரட்டிக்கொண்டு   அவர்களின்   பகைவர்களை   வென்று   பணம்   பெற்றுக்கொண்டு    அதை   அப்படியே  எம்பெருமான்    திருப்பணிக்கே   செலவிட்டு   ஆனந்தம்   அடைவார் .   அதன்    காரணமாக   அவர்   முனையடுவார்   என்று   அழைக்கப்பட்டார் .    அவர்   அடியார்களை   அன்புடன்   வரவேற்று   அறுசுவை   உணவிட்டு    மகிழ்வார் .  இவ்வாறு   பல   திருப்பணிகள்   செய்துகொண்டு   நெடுநாள்   வாழ்ந்து   ஐயன்   தாள்   புகுந்தார் . 

No comments:

Post a Comment