திருமறைக்காட்டில் அப்பரடி கள் கோயில் கதவை திறக்க செய்து மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த பிறகு அவருக்கு கோயில் திறந்த கதவை திரும்ப மூட செய்தால்தான் திறந்து இரவில் மூடி வைத்து மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமென சிந்தித்து சம்பந்தப்பெருமானை அழைத்து கதவை மூடச்செய்ய பாடும்படி வேண்டினார் . அவரும் பாட ஒரு செய்யுள் முடிந்ததும் கதவுகள் மூடி கொண்டன . மக்கள் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்பரும் சம்பந்தரும் மடத்திற்கு திரும்பினர் . இரவு நாவுக்கரசருக்கு உறக்கம் கொள்ளவில்லை . தான் பத்து பாடல்கள் பாடிய பிறகு அதுவும் ' இரக்கம் ஒன்றிலீர் ' என்று பாடியதும் திறந்த கதவு ஆளுடைப்பிள்ளையின் ஒரு பதிகத்திற்கே மூடிக்கொண்டது, அவருக்கு பெருத்த மனவேதனையை கொடுத்தது .
No comments:
Post a Comment