Sunday, 25 March 2018

மருள்நீக்கியார்   தன்   உடன்பிறந்தவளின்   காலை   இறுக   பற்றிக்கொண்டு   தன்னை   மன்னித்து   ஏற்றுக்கொள்ளும்படி   கதறினார் . தனக்கு   அவரை   தவிர   வேறு  கதியில்லை   தன்னை   காப்பாற்றும்படி   மன்றாடினார் .  திலகவதியார்   ஐயன்   தான்   வாக்களித்தபடி   தம்பியை   ஏற்றுக்கொள்ளவே   இந்நோயை   கொடுத்தார் . இனி   தம்பியை   பற்றி   கவலை   தேவை  இல்லை   அந்த   அம்பலக்கூத்தன்   ஏற்றுக்கொள்வான் .  என்று   பூரணமாக   நம்பி கண்ணீர்   மல்க   தம்பியை   தூக்கி   எடுத்தாள் .  மாட த் திலிருந்து   கை   நிறைய   திருநீரை   எடுத்து கொடுத்து   பிற   சமயங்களை   உதறிவிட்டு   வீரட்டானத்துறை   ஈசனை   சரணடை ந்தால்   எல்லாம்   அவர்   பார்த்துக்கொள்வார்   கவலை   வேண்டாம் இத்திருநீறை   அணிந்து   கொள் .என்று   சொல்லி   அவரை   அணைத்துக்கொண்டாள் 

No comments:

Post a Comment