Friday, 23 February 2018

இவ்வாறு   விசாரசர்மனின்   சிவஆராதனை   தொடர்ந்தது .  அவன்   மனமும்   ஆனந்தம்   அடைந்தது . வழக்கமாக   பசுக்களும்   இவன்   பாலபிஷேகத்திற்கு   தேவையான   பாலை   இவனுக்கு   அளித்துவிட்டு   சொந்தக்காரர்களுக்கும்   வஞ்சனையின்றி   பால்   பொழிந்தன .  அப்போது   ஒருநாள்   துரதிஷ்டவசமாக  ஒருவன்   விசாரசர்மன்     மணல்  லிங்கத்திற்கு   பால்   அபிஷேகம்   செய்வதை   பார்த்துவிட்டு   சிறுவன்   பாலை   வைத்துக்கொண்டு    விளையாடுவதாக   எண்ணி   அக்கிரகாரத்தில்   எல்லோரிடமும்   இதை   சொல்லிவிட்டு   அவன்   தந்தை   எச்சதத்தனிடமும்   முறையிட்டான் .  அவரும்   சிறுபிள்ளை   தெரியாமல்   செய்திருப்பான் .  கண்டிக்கிறேன்   என்று   சொல்லி  விட்டார் .  

No comments:

Post a Comment