விசாரசர்மன் அப்பசுக்களிடம் காட்டிய அன்பு அவன் ஈசனிடம் காட்டும் அன்பை போல் வியக்க வைப்பது . அவ்வுயிர்களிடமும் அவன் ஈசனை கண்டான் போலும் . அவ்வாவினங்களும் அவனிடம் அளவிலா அன்பை சொரிந்தன. அளவிலா பாலை சொரிந்தன . தினமும் அவன் அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு பாடசாலை சென்று அங்கு தன் அத்யயனம் முடித்துக்கொண்டு மாடுகளையும் கன்றுகளையும் திரட்டிக்கொண்டு மண்ணியாற்றங்கையில் செழிப்பான புல்வெளி நிறைந்த இடத்திற்கு ஒட்டி சென்று அவைகளை மேயவிடுவான் .
No comments:
Post a Comment