Sunday, 18 February 2018

 விசாரசர்மன்   அப்பசுக்களிடம்   காட்டிய   அன்பு   அவன்  ஈசனிடம்   காட்டும்   அன்பை  போல்   வியக்க   வைப்பது .  அவ்வுயிர்களிடமும்   அவன்   ஈசனை   கண்டான்   போலும் .   அவ்வாவினங்களும்   அவனிடம்    அளவிலா   அன்பை    சொரிந்தன.  அளவிலா   பாலை   சொரிந்தன .  தினமும்   அவன்   அதிகாலையில்    எழுந்து   காலைக்கடன்களை   முடித்துவிட்டு   பாடசாலை   சென்று   அங்கு   தன்   அத்யயனம்   முடித்துக்கொண்டு    மாடுகளையும்   கன்றுகளையும்   திரட்டிக்கொண்டு   மண்ணியாற்றங்கையில்   செழிப்பான   புல்வெளி    நிறைந்த   இடத்திற்கு   ஒட்டி  சென்று   அவைகளை   மேயவிடுவான் . 

No comments:

Post a Comment